சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Thursday, May 17, 2007

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கதை... எறும்பும் வெட்டுக்கிளியும்..

இது ஈ-மெயிலில் சுற்றிக்கொண்டிருக்கும் இடஒதுக்கீட்டிற்கு எதிரான கதை....
அப்படியே மொழிமாற்றம் செய்து இங்கு தந்திருக்கிறேன்.


--------------------------

பழைய கதை.. எறும்பும் வெட்டுக்கிளியும்.

வெயில் காலம். எறும்புகள் வெயிலையும் பொருட்படுத்தாது கடுமையாக உழைத்து உணவை தங்கள் புற்றுகளில் சேர்த்துக்கொண்டிருந்தன. ஆனால் வெட்டுக்கிளிகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஆடிப்பாடி நேரத்தை கழித்து கொண்டிருந்தன. அவை எறும்புகளை முட்டாள்கள் என்று கேலி பேசின. வெயில்காலம் போய் குளிர்காலம் வந்தது. எறும்புகள் தங்கள் புற்றில் கதகதப்போடு மகிழ்ச்சியாக இருந்தன. பாவம் வெட்டுக்கிளிகள் உணவின்றி குளிரில் வாடின.

புதிய கதை:

எறும்புகள் வெயிலையும் பொருட்படுத்தாது கோடையில் உழைத்து பொருளீட்டின. ஆனால் வெட்டுக்கிளிகள் உழைக்காமல் கேலி பேசி வீணில் பொழுதை கழித்தன.

குளிர்காலம் வந்தது. குளிரில் நடுங்கிய வெட்டுக்கிளிகள் பத்திரிகையாளர் கூட்டத்தை கூட்டின. குளிர்காலத்தில் தாங்கள் மட்டும் குளிரில் வாடவும் எறும்புகள் மகிழ்வாக இருப்பதுமான சமூக அவலத்தை அவை சாடின.
அனைத்து தொலைக்காட்சிகளும் இந்த கூட்டத்தை ஒளிபரப்பு செய்தன. மேலும் அவை குளிரிலும் பசியிலும் நடுங்கும் வெட்டுக்கிளிகளையும் அதே நேரத்தில் தங்கள் புற்றுகளில் மேஜை முழுதும் உணவுகளை பரப்பி மகிழ்வாக இருக்கும் எறும்புகளையும் காட்டின.

உலகமே இந்த பேதத்தை பார்த்தது. பதறியது. எப்படி வெட்டுக்கிளிகள் இவ்வாறு கஷ்டப்படலாம்.

அருந்ததி ராய் மற்றும் பலர் எறும்பின் புற்றுமுன் போராட்டம் நடத்தினர்.

மேதாபட்கர் பல வெட்டுக்கிளிகளை சேர்த்துக்கொண்டு உண்ணாவிரதம் இருந்தார். வெட்டுக்கிளிகளை இந்த குளிரிலிருந்து காப்பாற்ற அவற்றிற்குகந்த இடமாற்றம் வேண்டுமென கோரிக்கை விடு்தார்.

இவற்றை பார்த்த சர்வதேச அமைப்புகள் கோபி அன்னான் போன்றோர் இந்திய அரசாங்கத்தின் வெட்டுக்கிளிகளின் அடிப்படை உரிமைகளை கவனிக்காத போக்கை கண்டித்தனர்.

வலைத்தளமெங்கும் வெட்டுக்கிளிகளுக்கு ஆதரவான கட்டுரைகள்.

எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இடதுசாரிகள் மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் விசாரணை கமிஷன் வைக்கக்கோரி பந்த் அறிவித்தனர். கேரள அரசாங்கம் எறும்புகள் கடுமையாக உழைப்பதை தடுக்க சட்டம் இயற்றி எறும்புகளுக்கும் வெட்டுக்கிளிக்கும் இடையே சமத்துவத்தை நிலைநாட்டியது.

லல்லு பிரசாத் வெட்டுக்கிளிகள் பயணிப்பதற்கென தனி இரயில் பெட்டிகளை ஒதுக்கி அறிவித்தார்.

விசாரணை கமிஷனின் முடிவில் 'Prevention of Terrorism Against Grasshoppers Act' [POTAGA] சட்டம் இயற்றப்பட்டது.

அர்ஜுன் சிங் வெட்டுக்கிளிகளுக்கு என கல்விநிறுவனங்களிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தினார்.

போடாகா சட்டத்தின் படி எறும்புகள் தண்டிக்கப்பட்டு அவற்றின் வசமிருந்த புற்றுகள் கைப்பற்றப்பட்டு வெட்டுக்கிளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த வைபவத்தை அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பின.

அருந்ததி ராய் இதை 'நீதியின் வெற்றி' என்று கொண்டாடினார்.
லாலு இதை 'சமூக நீதி' என்றார்.
இடதுசாரிகள் இதை "மக்களின் மறுமலர்ச்சி" என்று கொண்டாடினர்.
கோபி அன்னான் வெட்டுக்கிளியை ஐநாவில் உரையாற்ற அழைத்தார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு...

எறும்புகள் இடம்பெயர்ந்து யுஎஸ்ஸில் சிலிக்கான் வேலியில் பில்லியன் டாலர் மதிப்புள்ள கம்பனியை நிறுவின.
100க்கணக்கான வெட்டுக்கிளிகள் இடஒதுக்கீட்டிற்கு பிறகும் எங்கோ இந்தியாவில் பசியால் இறந்து கொண்டிருந்தன...

உழைக்கும் எறும்புகளை உதறித்தள்ளி வெட்டுக்கிளிகளுக்கு ஊட்டிக் கொண்டு இருப்பதால் இந்தியா இன்னும் வளரும் நாடாகவே தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

--------------------


இந்த கதையின் கருத்தில் எனக்கு எவ்விதத்திலும் உடன்பாடு இல்லை என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.






1 Comments:

Blogger jeevagv said...

கலக்கலான கதை, இல்லை நிஜம்!
Hats off!

7:02 PM  

Post a Comment

<< Home