சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Monday, May 14, 2007

500 ரூபாய் வேண்டுமா...



மிகப்பெரிய பேச்சாளர் அவர். 200 பேர் இருந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றி கொண்டிருந்தார்.

அவர் ஒரு 500 ரூபாய் நோட்டை வெளியே எடுத்தார். புத்தம் புதிய சலவை நோட்டு.

"நான் இந்த 500 ரூபாயை உங்களில் ஒருவருக்கு தருவதாக உள்ளேன். யாருக்கு வேண்டும். வேண்டும் என்பவர்கள் கை தூக்கலாம்."

பல கைகள் உயர்ந்தன.

அவர் அந்த 500 ரூபாயை இப்போது கசக்கினார்.

கசங்கிய அந்த நோட்டை கையில் வைத்துக்கொண்டு கேட்டார்.
"இப்போது இந்த 500 ரூபாய் யாருக்கு வேண்டும்".

இப்போதும் பல கைகள் உயர்ந்தன.

அவர் அந்த 500 ரூபாயை இப்போது தரையில் போட்டு. கால்களால் மிதித்தார்.

"இப்போது இந்த 500 ரூபாய் யாருக்கு வேண்டும்".

இப்போதும் பல கைகள் உயர்ந்தன.

"நண்பர்களே இப்போது நீங்கள் மிக முக்கியமான படிப்பினையை அறிந்து கொண்டீர்கள். இதோ இந்த நோட்டின் மதிப்பு 500 ரூபாய். நான் கசக்கிய பிறகும் காலில் போட்டு மிதித்த பிறகும் அதன் மதிப்பு மாறவில்லை. இப்போதும் அது உங்களால் விரும்பப்படுகிறது. நமது வாழ்வில் நாமும் இது போலத்தான் பல தருணங்களில் கசக்கப்படுகிறோம் மிதிக்கப்படுகிறோம். சுயமதிப்பை இழந்து விட்டதாக வருத்தப்படுகிறோம். வாழ்க்கையில் வெறுப்படைகிறோம். ஆனால் உண்மையில் நமக்கு எது நடந்தாலும் நாம் நமது உண்மையான மதிப்பை இழப்பதில்லை. வாழ்க்கையில் எவ்வளவுதான் தோற்றபோதும் பிறரால் அவமானப்படுத்தப் பட்ட போதும் நாம் என்றும் நமக்கு உரியவர்களால் விரும்பப் படுபவர்களாகவே இருக்கிறோம். நமது வாழ்க்கையின் மதிப்பு நாம் என்னவாக இருக்கிறோம் எதை உடையவர்களாக இருக்கிறோம் என்பதில் இல்லை. நாம் நாமாக இருக்கிறோமா என்பதில்தான் இருக்கிறது. உங்கள் மதிப்பு உண்மையில் மிக அதிகம். இதை மறவாதீர்"

---------------

வள்ளுவம்:

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

1 Comments:

Anonymous Anonymous said...

நல்ல பதிவு.

9:00 AM  

Post a Comment

<< Home