சாத்வீகன்

எனது வானத்திற்கு கீழே...

Friday, November 17, 2006

முன்னை புரிந்த எந்தவம் விளைந்தவனே


அன்னை பாலகுமரனை துயிலெழுப்புதல்

ஓங்கிவளர் கயிலை மலைமாட்டு தலைவைத்து
தூங்கும் ஓர்குமரா பொழுது புலர்ந்ததுகாண்
எங்கள் தவப்புதல்வா நீளும் நித்திரை
நீங்கி நித்தம் அடியார்க்கருள நீயெழுவாய்

முன்னை புரிந்த எந்தவம் விளைந்தவனே
தன்னை மறந்தவன் போல் நாடகமேன்
அன்னை குரல் கேட்டும் துயிலுகின்றாய்
பின்னை நாளில் ஆடிக்களைத்தாய் போலும்


ஆதவனும் ஆங்கு மேற்செலாது நிற்கின்றான்
வேதத்தின் விளைபயனே ஈண்டு தூங்க
இதமான தன்கதிர் பட்டு துயிலெழுந்தால்
நிதமெனக்கு நான்முகன் போல்சிறை எனபயந்தே


இத்தனையும் உன்பொருட்டு இன்னமும் துயில்கொள்வாய்
சாத்திரங்கள் தடுமாறும் நித்திரை நீதொடர்ந்தால்
ஆத்திரம் மூளவில்லை அழகுமுகம் கண்டற்பால்
பாத்திறத்தால் பலசொல்வேன் பாலகனே நீயெழுவாய்.






0 Comments:

Post a Comment

<< Home